சென்னை மாநகராட்சி ஆணையத்தில் மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், பொது அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் போன்ற பணிகளுக்கு காலியாக உள்ள 46 காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக தற்சமயத்தில் சென்னை மாநகராட்சி ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு:
சென்னை மாநகராட்சி ஆணையம் மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், பொது அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பணிகளுக்கென காலியாக உள்ள 46 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்துக்கொள்ளவும்.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் MBBS, Diploma, PG Diploma with MBBS ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இந்த மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.90,000/- சம்பளம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையத்தின் பணிகளுக்கு தகுதியானவர்கள் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22/02/2023 தேதிக்குள் தபால் முறையிலோ அல்லது அலுவலகத்துக்கு நேரிலோ சென்று விரைவாக சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.